பள்ளி மாணவர்களை பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி வீடியோ எடுத்த ஆசிரியை! - அதிர்ச்சி சம்பவம்

0

பள்ளி மாணவர்களை தன் பாலியல் வக்கிரத்துக்குப் பயன்படுத்தி அதை வீடியோ பதிவு செய்த ஆசிரியையும், அவரின் நண்பரும் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ

மதுரை மாவட்ட அரசுப்பள்ளியில் பணியாற்றும் 45 வயதான ஆசிரியை ஒருவர் தன் கணவரைப் பிரிந்து கல்லூரியில் படிக்கும் மகனுடன் பெத்தானியாபுரத்தில் வசித்து வருகிறார்.

வீட்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டியூசனும் எடுத்து வந்தார். இந்த நிலையில், அண்மையில் அந்த ஆசிரியைப் பள்ளி மாணவர்களுடன் படுக்கையறையில் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டில் ஆசிரியையும், அவருடைய நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது அந்த ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

சிறார் மீதான பாலியல் வன்முறை

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆண் நண்பருடன் தொடர்பிலிருந்து வந்த அந்த ஆசிரியை அவரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்ததால் கண்டிக்க முடியாமல் கணவர் பிரிந்து சென்று விட்டார்.

அதன் பின்பு ஆண் நண்பர் வீட்டிலயே தங்கிவிட்டார். இணையதளம் மூலம் வக்கிரமான ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் இருவருக்கும் இருந்துள்ளது. அந்தப் பழக்கத்துக்கு அடிமையான ஆசிரியை தன்னிடம் டியூசன் படிக்க வரும் ஒரு சில மாணவர்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பார்க்க வைத்துள்ளார்.

இதில் சிக்கிவிட்ட பள்ளி மாணவர்கள் சிலரை வீட்டுக்கு வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை தன் ஆண் நண்பர் மூலம் வீடியோ எடுத்து அதை அடிக்கடி பார்த்து ரசித்து வந்துள்ளார்.

ஆசிரியையின் ஆண் நண்பர் உற்சாகத்தில் அந்த வீடியோக்களை தன் நண்பர்களுக்கு பகிர, சமூக ஊடகத்தில் பரவ ஆரம்பித்தது. அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிந்தவர்களும் பார்த்துள்ளனர்.

குற்றவாளிகள் கைது

அதைத்தொடர்ந்துதான் மாணவர்கள் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் இறங்கிய மதுரை மாநகர மகளிர் காவல்துறையினர் ஆசிரியை, அவரின் நண்பரும் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.

ஆசிரியை பயன்படுத்திய மொபைல் போன், வீட்டிலுள்ள லேப்டாப், கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ததில் ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அவரிடம் டியூசன் படித்த அனைத்து மாணவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்ட ஆசிரியையின் செயல் மதுரை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/tR1Bfmq
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*