Tamil News Live Today: திமுக அரசு மீது புகார் மனு - ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

0

ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு பிரச்னை, மின்வெட்டு, கள்ளச்சாராய/ விஷச்சாராய மரணங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிக்கவுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதற்காக, சின்னமலை அருகில் இருந்து காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு அளிக்கவுள்ளனர்.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*