``திரும்ப... திரும்ப அதேத் தவறை செய்கிறார் ஸ்டாலின்!" - வானதி சீனிவாசன்

0

கோவை, காந்திபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறேன்.

வானதி சீனிவாசன்

சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதல்வர் கூறியிருந்தார்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 10 முக்கிய பிரச்னைகளின் பட்டியலை அளித்திருக்கிறேன். ஒரு கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறவில்லை என்றால் பரவாயில்லை.

மு.க. ஸ்டாலின்

ஆனால், மாநிலத்தின் முதல்வராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். தொடர்ந்து அவர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்காமல் இருக்கிறார்.

இது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்விகேட்டபோது, மழுப்பலாக பதில் அளித்தாரே தவிர, எல்லோருக்கும் பொதுவான முதல்வர் என்று சொல்லவில்லை. சிறுபான்மை மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்துக்கள் பண்டிகைகளை ஒதுக்கிறார்.

வானதி சீனிவாசன் ஆட்சியர் சமீரன்

முதல்வர் திரும்ப திரும்ப அந்தத் தவறை செய்து கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானவுடன் ஒரு பேச்சு என்பதை தி.மு.க வழக்கமாகக் கொண்டுள்ளது“ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/jSyKqJ1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*