
"ஆர் யூ த்ரெட்டனிங் அஸ்..?!" - அண்ணாமலையிடம் கண் சிவந்த டெல்லி!
டெல்லியோடு இணக்கமாகச் செல்ல எடப்பாடியும், எடப்பாடியை அனுசரித்துச் செல்ல டெல்லியும் தீர்மானமாகிவிட்ட நிலையில், "எனக்கு இந்தக் கூட்டணி பிடிக்கலை. அறுத்துவிடுங்க..." என கடந்த மார்ச் 17-ம் தேதி, அமைந்தகரையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் அண்ணாமலை.
மேலும், "அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடர்ந்தால், என் பதவியை ராஜினாமா செய்வேன்" என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கொதித்திருக்கிறார். டெல்லி தலைமைக்கும் இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை அவர் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த 'ஸ்டன்ட்' எந்த அளவுக்கு உண்மை..?
டெல்லியின் ரியாக்ஷன் என்ன..?
கூட்டத்தில் கலந்துகொண்ட சீனியர் பா.ஜ.க தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்..?
பா.ஜ.க., அ.தி.மு.க தலைமைகளின் மனநிலை...
எடப்பாடி போடும் கணக்கு...
மேலும்,
அண்ணாமலை திட்டமும் 'அமைச்சர் கனவும்'!
பெண்களுக்கு ரூ. 1000 ... தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலிக்கு மத்தியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
தேர்தலில் இத்திட்டத்தின் தாக்கம் எப்படி இருக்கும்..?
எதிர்க்கட்சிகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்..?
விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
'பையனை அடிப்பீங்களா..?' - ஆசிரியரை சரமாரியாக தாக்கிய பெற்றோர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் செல்வி. செல்விக்கு திருமணம் ஆகி அவரின் கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார்.
சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு 7 வயதில் பிரகதீஸ் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ், தனது தாத்தாவான முனியசாமி உடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
ICC World Cup 2023: இந்தியாவில் எந்தெந்த மைதானங்களில் நடக்கும்?
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது அது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர், அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெற உள்ளன..?
சென்னையில் நடக்க வாய்ப்பு உண்டா?
இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
ஆயுள் காப்பீட்டு பாலிசி... தவிர்க்க வேண்டிய 8 தவறுகள்..!
மனித வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. அதனால், ஒருவர் அவரின் அன்புக்குரிய முக்கியமானவர்களை நிதி ரீதியாகப் பாதுகாப்பது அவசியமாகும். அதற்கு உற்ற நண்பனாக இருப்பது ஆயுள் காப்பீடு (Life Insurance).
காப்பீட்டை எடுக்கும்போது நம்மில் பலர் பல தவறுகளைச் செய்கிறோம். இதனால் பாதிக்கப்படுவது, பாலிசிதாரரை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்தான்.
பொதுவாக, பாலிசிதாரர்கள் செய்யும் எட்டு முக்கியமான தவறுகளையும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் இந்த வார நாணயம் விகடன் இதழில் சொல்கிறார் நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் விநாயக்.
அதனை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
தாய்ப்பால், பசும்பால், பவுடர் பால்: குழந்தைக்கு எது பெஸ்ட்?
'பச்சிளம் குழந்தை வளர்ப்பு' பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது.
தாய்ப்பால் சுரப்பினை அதிகரித்திடும் உணவுகள் என்ன? தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால், பவுடர் பால் தான் தர வேண்டுமா? பசும்பாலை கொடுக்கக் கூடாதா? தாய்ப்பால், பவுடர் பால் மற்றும் பசும்பாலிலுள்ள வேறுபாடுகள் என்ன?"
- இந்த கேள்விகளுக்கு புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவர் மு. ஜெயராஜ் MD தரும் விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மிஸ்டர் மியாவ்: சசிகுமாரின் அடுத்த நம்பிக்கை!
உடல்ரீதியான பிரச்னைகளால் படாத பாடுபடும் சமந்தாவுக்கு, இப்போதைய ஒரே நிம்மதி 'சாகுந்தலம்' படம்தானாம்.
சிகிச்சைகளுக்கு மத்தியில், சமீபத்தில் 'சாகுந்தலம்' படத்தை சமந்தாவுக்குப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறது படக்குழு. மகிழ்ச்சியிலும், ஆனந்தக் கண்ணீரிலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் சமந்தா.
மிஸ்டர் மியாவ் தரும் மேலும் பல சூடான சினிமா செய்திகள்...
முட்டிமோதும் 'பத்து தல' Vs 'விடுதலை'
சசிகுமாரின் அடுத்த நம்பிக்கை!
ஹீரோ வேட்டையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா!
போட்டோ ஷூட் நடத்தியே வாய்ப்புகளை அள்ளும் நடிகை!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
from விகடன்
umn news
