Bigg Boss 7 Tamil: `பவா மட்டுமில்லை இவங்களும்தான்!' பிக் பாஸ் வீட்டிலிருந்து தாமாக வெளியேறியவர்கள்!

0

`பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் பரபரப்போடு தொடங்கியுள்ளது.

முதல் போட்டியாளராக குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து அனன்யா வெளியேறியிருக்கும் சூழலில் தற்போது அந்த வீட்டிலிருந்து மற்றொரு போட்டியாளரான பவா செல்லதுரையும் வெளியேறியிருக்கிறார்.

பவா செல்லதுரை

இதற்கு மேல் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது எனக் கூறி அந்த வீட்டிலிருந்து தானாக விரும்பி வெளியே வந்திருக்கிறார் பவா செல்லதுரை. இதற்கு முந்தைய சீசன்களின்போதும் இதுபோல சிலர் வெளியேறியிருக்கிறார்கள். அப்படி, பிக்பாஸ் வீட்டிலிருந்து தானாக வெளியே வந்தவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளம் தான். அந்த ரீவைண்ட் இதோ!

`பிக்பாஸ்' சீசன் 1 தமிழில் வந்தபோது பலரும் அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அந்த சீனனில் போட்டியாளராகக் கலந்து கொண்ட நடிகர் ஶ்ரீ அந்த வீட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதே சீசனில் நடிகர் பரணி சுவர் ஏறிக் குதித்து அந்த வீட்டிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இவர் தான் ஜெயிப்பார் என ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்லிக் கொண்டிருந்த போட்டியாளர் ஓவியாவும் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் பரணி

ரெண்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் யாரும் தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறவில்லை. அதைத் தொடர்ந்து பலரும் முதல் சீசன் என்பதால் விளையாட்டு புரியாமல் போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

கேம் தெரிந்து வீட்டிற்குள் வருபவர்கள் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டுதான் விளையாடுகின்றனர் என்கிற முடிவுக்கு வர மூன்றாவது சீசனும் தொடங்கியது. சரவணன் விதிமுறையை மீறியதாகக் கூறி அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியது புரியாத புதிராக இருக்க தன்னை காயப்படுத்திக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார் மதுமிதா. 

மதுமிதா

சீசன் 4-ல் தானாக முன்வந்து எந்தப் போட்டியாளரும் அந்த வீட்டை விட்டு வெளியேறவில்லை. இந்த சீசன் எப்படி இருக்கப் போகிறது என பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக இருக்க சீசன் 5-ம் தொடங்கியது.

முதல் திருநங்கை போட்டியாளராக அந்த வீட்டிற்குள் மாடல் நமீதா மாரிமுத்து என்ட்ரியானார். வலுவான போட்டியாளராக நிச்சயம் இருப்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில் அவரும் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் விதிமுறைகளை மீறியதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்குக் காரணம் என்கிற கருத்துகள் அந்த நேரத்தில் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நமீதா

அடுத்ததாக, கடந்த சீசன். பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக நுழைந்தவர்களுள் யூடியூப் மூலம் பிரபலமான ஜிபி முத்துவும் ஒருவர்! ஜிபி முத்துவுக்கு மக்களிடையே ஆதரவு அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நிச்சயம் பைனல் வரைக்கும் செல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரும் தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இப்படி அந்தச் சூழலை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேறுவது பிக் பாஸில் தொடர்கதையாகிக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் கதை சொல்லியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, பல கதைகளையும் சொன்னார் பவா செல்லதுரை. அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகின. கடந்த வீக் எண்ட் எபிசோடில் கமல்ஹாசன் அதுகுறித்து விளக்கமும் கொடுத்தார்.

பவா செல்லத்துரை

இந்நிலையில், `என்னால் இந்த வீட்டுக்குள் இனி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது பிக் பாஸ்!' எனக் கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறியிருக்கிறார்.

பவா செல்லதுரை வெளியேறியது தொடர்பான உங்களது கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*