`மொத்தம் 100 பேருக்கு குறி!’ - எஸ்.பி வேலுமணி ரெய்டு பின்னணி..!

0

முன்னாள் அமைச்சர் வேலுமணி சம்பந்தப்பட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதலே ரெய்டு நடத்தி வருகின்றனர். வேலுமணியின் கோவை வீடு, தொண்டாமுத்தூர் பண்ணை வீடு, வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு, வடவள்ளி சந்திரசேகர், கே.சி.பி சந்திரபிரகாஷ், கோவை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் மதுராந்தகி இல்லம் என தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி வீடு

அறப்போர் இயக்கம், தி.மு.க கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலுமணி, அன்பரசன், சந்திரசேகர், சந்திரபிரகாஷ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டாலும், அ.தி.மு.க ஆட்சியில் அந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆவணங்கள் தூசி தட்டப்பட்டன. கடந்த சில வாரங்களாக விசாரணை தீவிரமடைந்து வந்தது. இதனால் வேலுமணியும் ரெய்டு எதிர்பார்த்து கொண்டிருந்தார்.

Also Read: “என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

அவர் எதிர்பார்த்து போலவே, லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று ரெய்டை தொடங்கினர். கடந்த 2014 முதல் 2018 வரை சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய் மற்றும் கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கான டெண்டர்கள் வேலுமணிக்கு வேண்டப்பட்ட (அவரது சகோதரர் அன்பரசன் உள்பட) நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. வேலுமணி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, டெண்டர் விதிகளை மீறியதுதான் முக்கிய குற்றச்சாட்டு.

இதனால் அன்பரசனின் செந்தில் அண்ட் கோ, கே.சி.பி இன்ஜினியர்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிகர லாபம் இந்த குறிப்பிட்ட காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளன. எஸ்.பி பில்டர்ஸ், கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, கான்ஸ்ட்ரோமால் கூட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேசன், வைடூரியா ஹோட்டல்ஸ், ரத்ன லட்சுமி ஹோட்டல்ஸ் என்று இவர்களின் நெட்வொர்க்கில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மீதும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் குறி வைத்துள்ளனர். வேலுமணி அண்ட் கோ சமீபத்தில் வாங்கிய சொத்து விபரங்களும் தோண்டி துருவப்பட்டு வருகின்றன.

இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. உள்ளாட்சி தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்காது. ஓப்பந்தங்கள் நேரடியாக அமைச்சர் கொடுப்பதில்லை. அதிகாரிகளுக்குதான் தெரியும்.

இந்த சோதனையால் அதிமுக கோவை மாவட்டத்தில் இன்னும் வலுவடையும். மாலை வரை நடந்தால் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள். சோதனையால் அனைத்து எம்.எல்.ஏ களும் ஓரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது்.

ஆட்சியும், அதிகாரமும் திமுகவிடம் இருப்பதால் சோதனை நடத்துகின்றனர். இந்த போக்கை கைவிடவில்லை எனில் திமுக இன்னும் பின்னடைவை சந்திக்கும். திமுக கொடுத்த 506 வாக்குறுதிகளில் ஓன்றிரண்டு மட்டுமே நிறைவேற்றி இருக்கின்றனர். வெள்ளை அறிக்கையில் எதுவும் இல்லை. அது அவர்களுக்கு சிவப்பு அறிக்கையாக எச்சரிக்கையாக மாறிவிட்டது. திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார் காட்டமாக.

Also Read: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yA7YFd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*